வாயுசேனா பதக்கம்
From Wikipedia, the free encyclopedia
வாயுசேனா பதக்கம் (Vayusena Medal) இந்திய வான்படை வீரர்களின் வீரதீரச் செயல்களுக்காகவும், அமைதிக்கால சேவைகளின் சிறப்பிற்காகவும், வழங்கப்படும் இந்தியப் படைத்துறை விருதாகும். மறைவிற்கு பின்னரும் இரண்டுக்கு மேற்பட்ட பதக்கங்கள் பெற்றவருக்கு ஆடைப்பட்டயம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் விருது குறித்தத் தகவல் ...
வாயுசேனா பதக்கம் | ||
![]() | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | பதக்கம் | |
வழங்கப்பட்டது | இந்திய வான்படை |
மூடு
இதனை 1960ஆம் ஆண்டு சூன் 17 அன்று, குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டு, 1961ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. வீரதீரச் செயல் புரிந்தோருக்கு "வாயுசேனா பதக்கம் (வீரச்செயல்)" என்றும், பிறருக்கு "வாயுசேனா பதக்கம் (சிறப்புப் பணி)" என்றும், வகைபடுத்தப்பட்டுள்ளது.