வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு
From Wikipedia, the free encyclopedia
வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு (Vasireddy Venkatadri Nayudu) ( 1783–1816 ) இவர் ஐதராபாத்தின் நிசாம் மற்றும்பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் இருந்த இந்தியாவின் குண்டூர் மாவட்டத்தில் ( பின்னர் அமராவதி ) சிந்தப்பள்ளி என்ற ஊரில் கம்மவர் பரம்பரையைச் சேர்ந்த ஒரு ஜமீன்தார் ஆவார். குண்டூர் மற்றும் கிருட்டிணா மாவட்டங்களில் அமைந்துள்ள 552 கிராமங்கள் மற்றும் நகரங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களை இவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். [1] இவர், சிந்தபள்ளியில் தனது பரம்பரை அரண்மனையை கைவிட்டு, பண்டைய சாதவாகனர்களின் தலைநகரான அமராவதியில் ஒரு புதிய அரண்மனையையும் நகரத்தையும் கட்டினார். அதன் கட்டுமானப் பணியின்போது, இவரது தொழிலாளர்கள் அங்கே புகழ்பெற்ற ஒரு அமராவதி தூணைக் கண்டுபிடித்தனர், அதோடு அதனை கணிசமான அளவில் சேதத்தையும் ஏற்படுத்தினர். [2]