வலைவாசல்:வரலாறு/நபர்கள்/7
From Wikipedia, the free encyclopedia
வரலாற்று நபர்கள்
சாஃபோ (Sappho) ஒரு பண்டைய கிரேக்கப் பெண் தன்னுணர்வுக் கவிஞர் ஆவார். லெஸ்போஸ் தீவில் பிறந்த இவரை பின் வந்த கிரேக்கர்கள் ஒன்பது தன்னுணர்வுக் கவிஞர்களுள் ஒருவராகக் கொள்வர். வரலாற்றிலும், கவிதையிலும் இவரை லெஸ்போஸ் தீவின் மிட்டிலீனி (Mytilene) என்னும் நகரத்துடன் தொடர்புபடுத்துவது உண்டு. இவர் பிறந்த இடமாக அதே தீவிலிருந்த இன்னொரு நகரான எர்சோஸ் என்னும் நகரையும் சொல்வது உண்டு. இவர் கிமு 630 க்கும் கிமு 612 க்கும் இடையில் பிறந்து கிமு 570 அளவில் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. இவரின் பெற்றோர்கள் ஸ்காமாண்டிரோனிமஸ், கிலெயிஸ் ஆவார்கள். இவருக்கு ஒரு மகள் இருந்ததாகவும் அவளை தனது தாயின் நினைவாக கிளெயிஸ் என்று அழைத்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவர் எழுதி பண்டைக் காலத்தவர் படித்துச் சுவைத்ததாகச் சொல்லப்படும் பெரும்பாலான கவிதைகள் இன்று கிடைத்தில எனினும் தப்பியிருக்கும் பகுதிகள் மூலம் அவரது புகழ் நிலைத்துள்ளது.