வரலாற்றாளர் என்பவர் இறந்த காலத்தைப் பற்றி ஆய்வு செய்து எழுதுபவர் ஆவார்.[1][2] வரலாற்றாளர் என்பது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனி மற்றும் பிற பகுதிகளில் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள் உருவானதன் காரணமாக ஒரு பிரிவானது.
லியோனார்டோ புரூனி (அண். 1370-1444) என்பவர் வரலாற்றை முதன்முதலாகப் பண்டைய, நடு மற்றும் நவீன காலங்கள் என்று மூன்று சகாப்தங்களாகப் பிரித்த முதல் வரலாற்றாளர் ஆவார்.
கி. மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாளரான எரோடோட்டசு (அண். 484–அண். கி. மு. 425). படைப்புகள் தற்போது எஞ்சியுள்ள ஆரம்பகால வரலாற்றாளர்களில் இவரும் ஒருவர்.