வடலி சகோதரர்கள்
From Wikipedia, the free encyclopedia
வடலி சகோதரர்கள் - புரஞ்சந்த் வடலி மற்றும் பியாரேலால் வடலி - இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸ் மாவட்டத்தின் குரு கி வடலியைச் சேர்ந்த சூஃபி பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ஆவர். [1] இருவரில் இளையவரான பியாரேலால் வடலி 4 மார்ச் 2018 அன்று தனது 75வது வயதில் அமிர்தசரஸ் ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் இருதய நிலையத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
வடலி சகோதரர்கள் | |
---|---|
ராஜா ராணி இசைவிழாவில் வடலி சகோதரர்கள் பாடியபோது. புரஞ்சந்த் வடலி(இடது) மற்றும் பியாரேலால் வடலி(வலது) | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | அம்ரிஸ்தர், பஞ்சாப், இந்தியா |
இசை வடிவங்கள் | சூஃபி இசை, பஞ்சாப் நாட்டுப்புற இசை |
இசைத்துறையில் | 1975 - நிகழ்காலம் |
சூஃபி துறவிகளின் செய்திகளைப் பாடுவதற்காக பெயர்பெற்ற இசைக்கலைஞர்களின் ஐந்தாம் தலைமுறையில் பிறந்த வடலி சகோதரர்கள், சூஃபி பாடகர்களாக மாறுவதற்கு முன்பு மிகவும் எதிர்பாராத தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். மூத்த சகோதரரான புரஞ்சந்த் வடலி, 25 ஆண்டுகளாக அகாராவில் (மல்யுத்த வளையம்) இருந்தார். இளயவரான ப்யாரேலால் கிராமத்தில் ராஸ் லீலாவில் கிருஷ்ணனாக நடித்ததன் மூலம், பியாரேலால் குடும்பத்திற்கு வருமானத்திற்காகப் பங்களித்தார்.