From Wikipedia, the free encyclopedia
வசிர் கான் மஸ்ஜித்து (பஞ்சாபி மற்றும் உருது: مسجد وزیر خان ; Masjid Wazīr Khān) என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகணத்தின் தலைநகர் இலாகூரில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் முகலாயப் பேரரசர் ஷாஜகான் ஆட்சிக்காலத்தில் கட்டிடத் தொகுப்பில் ஒருபகுதியாகக் கட்டப்பட்டது, இத்தொகுப்பில் பள்ளியின் அருகிலுள்ள சாகி அமாம் குளியலறைகளும் அடங்கும். வாசிர் கான் மஸ்ஜித்து கட்டுமானம் 1634 C.E., தொடங்கி 1641 இல் முடிக்கப்பட்டது.[1]
மிகவும் அழகியலாகக் கட்டமைக்கப்பட்ட முகலாயப் பள்ளிவாசலாகக் கருதப்படும்,[2] வசிர் கான் மஸ்ஜித்து அதன் காசி-கரி எனும் பளிங்கு வேலைகளுக்கும், மற்றும் உள்பகுதியில் முழுவதும் அழகுபடுத்தப்பட்ட முகலாய சுதை வண்ணங்களுக்கும் புகழ் பெற்றதாகும். 2009 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பள்ளிவாசலில் விரிவான மீட்டமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன, இப் பணிகள் ஆகா கான் கலாச்சார தொண்டு நிறுவனம் மற்றும் பஞ்சாப் மகாண அரசின் வழிகாட்டுதலின் கீழ் ,[3] செருமனி, நார்வே, மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றன.[4]
இப்பள்ளிவாசல் இலாகூர் கோட்டை நகரின் தெற்குப் பகுதியிலுள்ள இலாகூரின் "சாகி குசாரா", அல்லது "அரசுச் சாலையில்" அமைந்துள்ளது. இச்சாலை முகலாய அரசின் முக்கியப் பிரமுகர்கள் இலாகூர் கோட்டைக்குச் செல்வதற்காகப் பயன்படுத்தும் வழியாக இருந்து வந்தது.[5] இப்பள்ளிவாசல் சாகி அமாம் அமைந்துள்ள தில்லி வாயிலில் இருந்து 260 மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது.[5] இப்பள்ளியின் முகப்பு வசிர்கான் சதுக்கம் மற்றும் சிட்டா வாயிலை நோக்கியதாக உள்ளது.
இப்பள்ளிவாசல் கட்டுவதற்கான முயற்சி முகலாய அரசவையின் தலைமை வைத்தியர் வசீர் கான் என அழைக்கப்படும் ஹக்கீம் இல்முத்தீன் அன்சாரி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.[6][7][8] வசீர் கான் பின்னாளில் பஞ்சாப் மகாணத்தின் "சுபேதாராக" நியமிக்கப்பட்டார்,[6] மேலும் இலாகூரில் பல முக்கியக் கட்டிடங்களைக் கட்டியுள்ளார்.[6] வசிர்கானுக்கு தில்லி வாயிலுக்கு அருகில் பல நிலங்கள் இருந்தன, அந்த நிலத்தில் புகழ்பெற்ற சூபி ஞானி மீரான் பாதுசா அடக்கத்தலத்தை உள்ளடக்கியதாகப்,[9] பள்ளிவாசல் வளாகக் கட்டுமானத்தைத் தொடங்கினார், இந்த அடக்கத்தலம் இப்போது பள்ளிவாசல் முற்றத்தில் அமைந்துள்ளது.[6] வசிர்கான் பள்ளிவாசல் கட்டுமானத்திற்கு முன்பு, இந்த இடத்தில் சூபித்துறவியின் பழைய தர்கா இருந்தது.[10]
இப் பள்ளிவாசலின் உட்பகுதி முகலாய மற்றும் உள்ளூர் பஞ்சாபிய அழகு நயங்கள் பொருந்திய சுதை வண்ண வேலைப்பாடுகளையும், வெளிப்பகுதி "காசி-காரி" எனப்படும் பாரசீக பாணியிலான பளிங்கு வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது.[11] மரியம் சமானி பேகம் பள்ளிவாசலை இலாகூரின் வெள்ளிக் கிழமைத் தொழுகைக்கான பெரிய பள்ளிவாசல் என்ற நிலையலிருந்து வசிர்கான் பள்ளிவாசல் மாற்றீடு செய்தது.[12]
வசிர் கான் பள்ளிவாசல் மிகப்பெரிய வளாகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இவ்வளாகத்தில் வரிசையாகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன, இவை பாரம்பரியமாக கையெழுத்துக் கலைஞர்கள் மற்றும் புத்தகப் பிணைப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, மற்றும் பள்ளிவாசலின் முதன்மை வாயிலின் முன்புறம் நகரச் சதுக்கம் அமைந்துள்ளது.[13]
வசிர் கான் பள்ளிவாசல் தெற்கு ஆசியாவில் முதல் மாதிரியான "சாருசு கடைவீதி", அல்லது நான்கு அச்சுக் கடைவீதி நோக்கிற்காகக் கட்டப்பட்ட அமைப்பினைக் கொண்டுள்ளது - இருப்பினும் வசிர் கான் பள்ளிவாசல் வடிவமைப்பில் இந்த நான்கு அச்சுகளில் இரண்டு அச்சுகள் பள்ளிவாசலின் நுழைவு வழியாகவும், மற்ற இரண்டு அச்சுகள் கையெழுத்துக் கலைஞர்கள் கடைவீதியை உருவாக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளன.[14]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.