லீலா கலீத்
From Wikipedia, the free encyclopedia
லீலா கலீத் (Leila Khaled) (பிறப்பு:1944 ஏப்ரல் 9) ஒரு பாலத்தீன ஏதிலியாவார். [1] மேலும், இவர் பாலத்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியின் உறுப்பினராகவும் இருக்கிறார்.
லீலா கலீத் | |
---|---|
ஏகாதிபத்திய எதிர்ப்பு, மக்களுக்கு இடையிலான ஒற்றுமை, மற்றும் மாற்று என்ற தலைப்பில் பெய்ரூட் சர்வதேச மன்றத்தில் நடந்த கருத்தரங்கில் கலீத், 2009 | |
தாய்மொழியில் பெயர் | ليلى خالد |
பிறப்பு | ஏப்ரல் 9, 1944 (1944-04-09) (அகவை 80) கைஃபா, கட்டளைப் பலத்தீன் |
தேசியம் | பாலத்தீனியர் |
அமைப்பு(கள்) | பாலத்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி |
அறியப்படுவது | பாலத்தீனியப் போராட்டம் |
அரசியல் இயக்கம் | அரபு தேசியவாத இயக்கம் |
1969 ஆம் ஆண்டில் திரான்ஸ் வேர்ல்ட் விமான நிறுவனத்தின் "விமானம் 840"ன் கடத்தலில் இவரது பங்கிற்காகவும், அடுத்த ஆண்டு ஜோர்தானில் நடந்த உள்நாட்டுப் போரான "கருப்பு செப்டம்பர்" பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் [2] [3], நியூயார்க் நகரத்திற்கு சென்ற மூன்று விமானங்களையும் இலண்டனுக்குச் சென்ற ஒரு விமானத்தையும் கடத்தி ஜோர்தான் அருகிலுள்ள தொலைதூர பாலைவன வான்வழிப் பகுதியான டாசன் என்ற இடத்தில் தரையிறக்கிய ச்ம்பவத்திலும் http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/september/12/newsid_2514000/2514929.stm இவர் மக்கள் கவனத்திற்கு வந்தார். ஒரு விமானத்தை கடத்திச் சென்ற முதல் பெண்ணான, [4] இவர், பிற பாலத்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி (பி.எஃப்.எல்.பி) உறுப்பினர்களால் கடத்தப்பட்ட பணயக்கைதிகளுக்கான பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டார். [5]