லிச்சாவி
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் / From Wikipedia, the free encyclopedia
லிச்சாவி (Licchavi) (Lichchhavi, Lichavi) நேபாளாத்தில் கி பி 400 முதல் 750 வரை காத்மாண்டு சமவெளியில் லிச்சாவி எனும் அரச மரபினரால் ஆளப்பட்டது. இவர்கள் ஆண்ட பகுதிக்கு லிச்சாவி நாடு என்பர். கௌதம புத்தர் காலத்திய லிச்சாவிகளின் மகாஜனபத குடியரசு நாட்டிற்கும், நேபாளத்தை ஆண்ட இந்த லிச்சாவி அரச குலத்தினருக்கும் உள்ள தொடர்பு அறியப்படவில்லை.
லிச்சாவியர்கள் தங்களது கல்வெட்டு குறிப்புகளை சமஸ்கிருத மொழியில் எழுதி வைத்திருந்தனர். லிச்சாவி எனும் சொல்லிற்கு சமஸ்கிருத மொழியில் நட்சத்திரம் எனப் பொருள். [1]
முதலில் காத்மாண்டு நகர சதுக்கத்தில், கி பி மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கோயில்களை எழுப்பியவர் முதலாம் மானதேவன் எனும் லிச்சாவி குல மன்னர் ஆவார்.