லாலா தீன் தயாள்
இந்தியப் புகைப்பட நிபுணர் / From Wikipedia, the free encyclopedia
லாலா தீன் தயாள் (Lala Deen Dayal பஞ்சாபி மொழி: ਲਾਲਾ ਦੀਨ ਦਯਾਲ; 1844–1905) இந்தியாவைச் சார்ந்த புகைப்பட நிபுணர் ஆவார். இவர் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர். இவர் ராஜா தீன் தயாள் என்றும் அழைக்கப்பட்டார்.[1]) 1870 களின் மத்தியில் இவர் தொழில்முறைப் புகைப்பட நிபுணராகப் பணியாற்றினார். இவரது புகைப்பட நிலையங்கள் இந்தூர், மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் அமைந்திருந்தன. இவர் ஆறாவது ஐதராபாத் நிசாமின் அரசவைப் புகைப்பட நிபுணராக விளங்கினார். 1897 ஆம் ஆண்டு விக்டோரியா அரசியிடமிருந்து விருதும் பெற்றார்.[2]
விரைவான உண்மைகள் லாலா தீன் தயாள், பிறப்பு ...
லாலா தீன் தயாள் | |
---|---|
பிறப்பு | 1844 (1844) உத்திரப் பிரதேசம் |
இறப்பு | 5 July 1905 (1905-07-06) (61 வயது) மும்பை, இந்தியா |
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது | புகைப்படக்கலை |
மூடு