லங்டாங் தேசிய பூங்கா
நேபாளத்தின் முதல் இமயமலை தேசிய பூங்கா / From Wikipedia, the free encyclopedia
லங்டாங் தேசியப் பூங்கா (Langtang National Park) நேபாள நாட்டில் நிறுவப்பட்ட முதலாவது இமயமலை தேசியப் பூங்காவாகும். நாட்டின் நான்காவது பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் இப்பூங்கா கருதப்படுகிறது. லங்டாங் தேசியப் பூங்கா 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 6450 மீட்டர் உயரத்தில் 1710 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் இது அமைக்கப்பட்டுள்ளது. நுவாகோட் மாவட்டம், ரசுவா மாவட்டம், சிந்துபால்சோக் மாவட்டம் ஆகிய மாவட்டங்களுடன் சேர்ந்த மைய இமயமலைப் பகுதியை 26 கிராம சமூகங்கள் சூழ்ந்துள்ளன. வடக்கிலும் கிழக்கிலும் இப்பூங்கா திபெத்திலுள்ள கியோமோலங்மா தேசிய இயற்கைவளம் காப்புப் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது [1]. மேற்கு எல்லையில் போட்கோசி மற்றும் திரிசூலி ஆறுகள் உள்ளன. காத்மாண்டு பள்ளத்தாக்கிற்கு வடக்கே 32 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு எல்லை உள்ளது.[2].
லங்டாங் தேசியப் பூங்கா Langtang National Park | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
விண்மீன்கள் நிறைந்த லங்டாங் தேசியப் பூங்காவின் இரவு | |
அமைவிடம் | நேபாளம் |
அருகாமை நகரம் | காத்மாண்டு |
ஆள்கூறுகள் | 28°10′26″N 85°33′11″E |
பரப்பளவு | 1,710 km2 (660 sq mi) |
நிறுவப்பட்டது | 1976 |
நிருவாக அமைப்பு | தேசியப்பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புத் துறை |
பூங்காவின் உட்புறத்தில் 4300 மீட்டர் உயரத்தில் கோசைன்குண்டா என்ற புனித நீர் ஏரி அமைந்துள்ளது. 6988 மீட்டர் உயர தோர்யி லக்பா என்ற மலை இப்பூங்காவை மேற்கு-கிழக்கு முதல் தென்கிழக்கு வரையென இரண்டாகாப் பிரிக்கிறது. லங்டாங் லிரங் உச்சி இப்பூங்காவின் மிக உயர்ந்த பகுதியாகும் [3]. புனிதமான இமயமலை நிலப்பரப்பின் ஒரு பகுதி லங்டாங் தேசியப் பூங்காவாகும் [4].