ரோசா லக்சம்பேர்க்
From Wikipedia, the free encyclopedia
ரோசா லக்சம்பேர்க் (Rosa Luxemburg, மார்ச் 5, 1871[1] – சனவரி 15, 1919), போலந்தில் பிறந்த ஒரு செருமானிய மார்க்சியவாதியும் சோசலிச மெய்யியலாளரும், பொருளியலாளரும், ஒரு புரட்சியாளரும் ஆவார்.
ரோசா லக்சம்பேர்க் Rosa Luxemburg | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 மார்ச் 1871 சமோஸ்க், விஸ்தூலா நிலம், ரஷ்யா |
இறப்பு | 15 சனவரி 1919 பெர்லின், செருமனி |
குடியுரிமை | செருமனியர் |
தேசியம் | போலந்து |
அரசியல் கட்சி | செருமனியக் கம்யூனிஸ்ட் கட்சி |
துணைவர் | குஸ்தாவ் லூபெக் |
துணை | லியோ யோகித்சே |
உறவுகள் | எலியாஸ் லக்சம்பேர்க் (தந்தை) லீன் லோவென்ஸ்டைன் (தாய்) |
தொழில் | புரட்சியாளர் |
செங்கொடி (Die Rote Fahne) என்ற இதழை இவர் ஆரம்பித்தார். முதலாம் உலகப் போரில் செருமனி பங்குபற்றியதை செருமனி சமூக-மக்களாட்சிக் கட்சி ஆதரித்ததைத் தொடர்ந்து இவர் மற்றொரு மார்க்சியவாதியான கார்ல் லீப்னெக்ட்டுடன் இணைந்து "புரட்சிகர ஸ்பர்டாசிஸ்ட் முன்னணி" (Spartacist League) என்ற அமைப்பை உருவாக்கினார்.[2] இதுவே பின்னர் செருமனியக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரைப் பெற்றது. ஸ்பர்டாசிஸ்ட் லீக் தலைமையில் 1919 சனவரியில் நடத்தப்பட்ட பேர்லின் புரட்சி தோல்வியில் முடிந்தது. ரோசா லக்சம்பேர்க்கின் ஆதரவிலான இப்புரட்சி ஃப்ரீகோர்ப்ஸ் என்ற வலதுசாரி துணை இராணுவக்குழுவினரால் நசுக்கப்பட்டது. ரோசா மற்றும் லீப்னெக்ட் உட்பட பல இடதுசாரிகள் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் இறப்பின் பின்னர் ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் இருவரும் சனநாயக சோசலிஸ்டுகளாலூம் மார்க்சியவாதிகளாலும் மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர்.