![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/61/Rudramadevi.jpg/640px-Rudramadevi.jpg&w=640&q=50)
ருத்திரமாதேவி
From Wikipedia, the free encyclopedia
ருத்திரமாதேவி (Rudrama Devi) கி.பி. 1259 முதல் 1295 வரை தக்காணத்தில் வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசியார் ஆவார். வாரங்கல்லை ஆண்ட கணபதிதேவரின் மகளான இவர், தம் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அரசியாக முடிசூட்டிக் கொண்டார். கிழக்குச் சாளுக்கியத்தில் நைதவோலுவின் இளவரசனான வீரபத்திரன் என்பவரை மணம் செய்துகொண்டார்.[1] இவரது தொடக்கக்கால ஆட்சியில் சிற்றரசர்கள் பலர் தொல்லை கொடுத்து வந்தனர். அரசிக்கு உறுதுணையாக இருந்த அம்பதேவர் உதவியுடன் அத்தொல்லைகளை அடக்கினார். யாதவத் தலைவர் மகாதேவர் இவரை எதிர்த்துப் போர்செய்து தோல்வி அடைந்தார். இப்போர்களில் ருத்திரமாதேவியின் பேரன் பிரதாபருத்திரன் வெற்றிவாகை சூடினான். ருத்திரமாதேவி கி.பி. 1280 - ஆம் ஆண்டு பிரதாபருத்திர தேவரை இளவரசராக நியமித்தார்.
ருத்திரமாதேவி | |
---|---|
ருத்ரம்மா தேவி | |
![]() இராணி ருத்ரம்மா தேவியின் சிலை | |
முன்னையவர் | கணபதி தேவா |
பின்னையவர் | Prataparudra II |
பிறப்பு | ருத்ரம்மா தேவி |
இறப்பு | கி.பி. 1289 நவம்பர் 27 சந்துபட்லா |
துணைவர் | சாளுக்கிய வீரபத்ருலு |
அரசமரபு | காக்கத்தியர் |
தந்தை | கணபதி தேவா |
எட்டாண்டுகளுக்கு பின் அம்பதேவர் ஒய்சாளர், யாதவர் ஆகியோரைத் துணைக்கு சேர்த்துக் கொண்டு, ருத்திரமாதேவிக்கு எதிராகப் போர் தொடுத்தார். 1291 - இல் பிரதாபருத்திரர் அதனை அடக்கி வெற்றிவாகை சூடினார். 1295 - இல் ருத்திரமாதேவி காலமானபோது பிரதாபருத்திரர் 'இரண்டாம் பிரதாபருத்திரர்' என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டார்.படைப்பு பாரதி மைசூர்