யாங் டி பெர்துவா நெகிரி பட்டியல்
From Wikipedia, the free encyclopedia
யாங் டி பெர்துவா (ஆங்கிலம், மலாய் மொழி: Yang di-Pertua) என்பவர், மலேசியாவில் மலாக்கா, பினாங்கு, சரவாக், சபா மாநிலங்களின் ஆளுநர் ஆகும். 1957-ஆம் ஆண்டு, மலேசியா சுதந்திரம் அடைந்தது. அதற்கு முன்பு, ஒரு மாநிலத்தின் ஆளுநரை கவர்னர் என்று அழைத்தார்கள்.[1] சுதந்திரம் அடைந்த பின்னர், அவரை மாநில ஆளுநர் (Yang di-Pertua Negeri) என்று அழைக்கிறார்கள்.
சிலாங்கூர், திரங்கானு, கெடா, கிளாந்தான், பகாங், ஜொகூர், பேராக் மாநிலங்களின் அரசர்களை சுல்தான்கள் (Sultan) என்றும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசரை யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்றும்; பெர்லிஸ் மாநிலத்தின் அரசரை ராஜா (Raja) என்றும் அழைப்பது வழக்கம்.[2]