யசோதர்மனின் மண்டோசோர் வெற்றித் தூண் கல்வெட்டுகள்
From Wikipedia, the free encyclopedia
மன்னர் யசோதர்மனின் மண்டோசோர் வெற்றித் தூண் கல்வெட்டுகள், (Mandasor Pillar Inscriptions of Yashodharman) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மண்டசௌர் மாவட்டத்தின் தலைமையிடமான மண்டோசோர் நகரத்திற்கு தெற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேந்தனி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. கிபி 6ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த, பௌத்தர்களுக்கு எதிரானவரும், கொடூரமானவருமான ஹூணர்களின் மன்னர் மிகிரகுலனை, அவ்லிக இராச்சிய மன்னர் யசோதர்மன் வெற்றி கொண்டமையை சிறப்பிக்க மணற்கல்லாலான வெற்றித் தூண் நிறுவப்பட்டது. அத்தூணில் சமசுகிருத மொழியில் மன்னர் யசோதர்மனின் போர் வெற்றிகள் குறித்து கல்வெட்டாக குறிக்கப்பட்டுள்ளது.[1] [2][3]
விரைவான உண்மைகள் செய்பொருள், எழுத்து ...
மண்டோசோர் வெற்றித் தூண் கல்வெட்டுகளின் பிரதி | |
செய்பொருள் | மணற்கல் தூண் |
---|---|
எழுத்து | சமசுகிருதம் |
உருவாக்கம் | கிபி 515–550 |
காலம்/பண்பாடு | குப்தர்கள் காலம் |
கண்டுபிடிப்பு | 1884 |
இடம் | சோந்தனி, மண்டோசோர், மண்டசௌர் மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
தற்போதைய இடம் | யசோதர்மன் அருங்காட்சியகம் |
மூடு