மோகனூர்
From Wikipedia, the free encyclopedia
மோகனூர் (ஆங்கிலம்:Mohanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இங்கு பிறந்தார். மோகனூர் சோழ மண்டலத்தின் மேற்கு எல்லையாகவும், சோழ மண்டலத்தின் முகம் போன்றும் அமைந்திருப்பதால் இந்த ஊர் வரலாற்று காலத்தில் முகவனூர் என்றழைக்கப்பட்டது. பின்னாளில் மோகனூர் என்று மருவி நின்று நிலை பெற்றது. கொங்கு மண்டலச் சதகத்துக்குள் இதற்கான பாடல்கள் ஆதாரமாக உள்ளன. மூவர் தேவாரத்தில் கொங்கு தென்குமரி என இந்த ஊர் காவிரிக்கரை சிறப்பித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள்
மோகனூர் | |||||||
அமைவிடம் | 11°05′N 78°10′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | நாமக்கல் | ||||||
வட்டம் | மோகனூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
14,315 (2011[update]) • 4,772/km2 (12,359/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
3 சதுர கிலோமீட்டர்கள் (1.2 sq mi) • 143 மீட்டர்கள் (469 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/mohanur |
மூடு