மைக்கல்சன்-மோர்லி பரிசோதனை
From Wikipedia, the free encyclopedia
மைக்கல்சன் மோர்லி பரிசோதனை யானது (Michelson–Morley experiment) 1887 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் மற்றும் எட்வர்ட் மோர்லி என்பவர்களால் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக நடத்தப்பட்டது. நிலையான ஈதர் ஊடகத்திற்கும் பொருளுக்கும் (பூமி) உள்ள சார்பு இயக்கத்தை கண்டறிவதற்காக இந்த சோதனை செய்யப்பட்டது. ஆனால், இதன் எதிர்மறையான முடிவு ஈதர் என்னும் ஊடகம் இல்லையென கூறியது. இதுவே சிறப்புச் சார்புக் கோட்பாடு எனும் ஒரு புதிய கொள்கை எழவும் காரணமாயிற்று. இந்த சோதனை இயற்பியல் உலகில் மிகப் பிரபலமான தோற்றுப்போன ஆய்வு (The Most Famous Failed Experiment) என்று அழைக்கபடுகிறது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |