முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்
From Wikipedia, the free encyclopedia
முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் (Mustafa Kemal Atatürk - 19 மே 1881 – 10 நவம்பர் 1938) ஒரு துருக்கிய படை அலுவலரும், புரட்சிகர அரசியலாளரும், துருக்கிக் குடியரசின் நிறுவனரும் அதன் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார். கலிப்பொலி சண்டையின் போது பிரிவுக் கட்டளை அலுவலராகப் பணியாற்றிய காலத்தில் இவர் தன்னை ஒரு புத்திக் கூர்மையுள்ள மிகத் திறமையான படை அலுவலராக நிலைநிறுத்திக் கொண்டார்[1]. இவர் பின்னர் முதலாம் உலகப் போரில் கிழக்கு அனத்தோலியப் போர் முனையிலும், பாலஸ்தீனியப் போர் முனைப் பகுதியிலும் திறமையாகச் செயல் பட்டார். ஓட்டோமன் பேரரசு கூட்டணிப் படைகளிடம் தோல்வியடைந்ததையும் அதன் பிரிவினைக்கான திட்டங்களையும் தொடர்ந்து இவர் துருக்கியின் விடுதலைப் போராக மாறிய துருக்கிய தேசிய இயக்கத்தைத் தொடங்கி வழிநடத்தினார். அங்காராவில் ஒரு இடைக்கால அரசை அமைத்த இவர் நட்பு நாடுகளால் அனுப்பப்பட்ட படைகளைத் தோற்கடித்தார். இவரது வெற்றிகரமான படை நடவடிக்கைகள் நாடு விடுதலை பெறுவதற்கும் துருக்கிக் குடியரசு உருவாவதற்கும் வழி வகுத்தது.
முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் | |
---|---|
1st துருக்கியின் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 29 அக்டோபர் 1923 – 10 நவம்பர் 1938 | |
பின்னவர் | இஸ்மெத் இனோனு |
1st துருக்கியின் முதன்மை அமைச்சர் | |
பதவியில் 3 மே 1920 – 24 ஜனவரி 1921 | |
பின்னவர் | ஃபெவ்சி சாக்மக் |
1st பராளுமன்ற அவைத்தலைவர் | |
பதவியில் 24 ஏப்ரல் 1920 – 29 அக்டோபர் 1923 | |
பின்னவர் | அலி ஃபேத்தி ஒக்யார் |
1st குடியரசு மக்கள் கட்சித் தலைவர் | |
பதவியில் 1919–1938 | |
பின்னவர் | இஸ்மெத் இனோனு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1881-05-19)மே 19, 1881 செலானிக் (தெசாலோனிக்கி) |
இறப்பு | 10 நவம்பர் 1938(1938-11-10) (அகவை 57) தோல்மாபாசே மாளிகை, இஸ்தான்புல் |
தேசியம் | துருக்கியர் |
அரசியல் கட்சி | குடியரசு மக்கள் கட்சி |
துணைவர் | லத்தீபா உசாக்லிகில் (1923–25) |
கையெழுத்து | |
நாட்டின் முதல் தலைவராக இவர் பெரிய அளவில் அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சீர்திருத்தத் திட்டங்களை நடைமுறைப் படுத்தினார். அறிவொளி இயக்கத்தின் ஆர்வலராக விளங்கிய இவர் ஓட்டோமான் பேரரசின் அழிபாடுகளிலிருந்து, நவீன மக்களாட்சி, மதச் சார்பற்ற, நாட்டின அரசு ஒன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். இவரது ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டது.[2] அத்தாதுர்க்கின் சீர்திருத்தங்கள் குறித்த கொள்கைகள் கெமாலியம் என அழைக்கப்பட்டதுடன், இதுவே தற்காலத் துருக்கியின் அரசியல் அடிப்படையாகவும் விளங்குகிறது. தென்மேற்கு துருக்கியில் அதிகமான குர்து இன மக்கள் வாழ்ந்த போதும் துருக்கியை துருக்கி இன மக்கள் உள்ள நாடாக, தனி இனம் மட்டும் உள்ள நாடாக மாற்ற முயன்றார்.[3][4] [5][6] நவீன துருக்கி நாட்டை உருவாக்கயதற்காக துருக்கி நாடாளுமன்றம் இவருக்கு அத்தாதுர்க் என்ற பட்டத்தை 1934இல் வழங்கியது. அத்தாதுர்க் என்றால் துருக்கியின் தந்தை என்று பொருள்.[7]