![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/Murlikant_Petkar.jpg/640px-Murlikant_Petkar.jpg&w=640&q=50)
முரளிகாந்த் பெட்கார்
இந்தியத் தடகள வீரர் / From Wikipedia, the free encyclopedia
முரளிகாந்த் பெட்கார் (Murlikant Petkar) என்பவர் பாரா ஒலிம்பிக் எனப்படும் இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக முதன் முதலில் தங்கப் பதக்கத்தை வென்றவர் ஆவார். செருமனியின் ஐடெல்பெர்கு நகரில் 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால இனை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இவர் தனிநபர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 50 மீட்டர் நீள கட்டற்ற முன்னோக்கு நீச்சல் போட்டிப் பிரிவில் பந்தய தொலைவை 37.33 நொடிகளில் கடந்து உலக சாதனையை முரளிகாந்த் நிகழ்த்தினார். இதே போட்டியில் ஈட்டி எறிதல், தடை பனிச்சறுக்கு படகுப் போட்டி ஆகிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றார். இம்மூன்று பிரிவுகளிலும் இவர் இறுதிச் சுற்று வரை முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது [1]. 2018 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி சிறப்பித்தது [2].