முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு
இந்திய ஆட்சி மொழி கொள்கைக்கான ஒரு ஒப்பந்தம் / From Wikipedia, the free encyclopedia
முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு அல்லது முன்ஷி-அய்யங்கார் வாய்ப்பாடு (Munshi-Ayyangar Formula) இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுத்த ஒரு ஒப்பந்தமாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய முதலாம் நாடாளுமன்றத்தில் இந்தி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், இரு தரப்பினரும் தங்கள் கொள்கைகளை சிறிது விட்டு கொடுத்து சமரசம் செய்து கொண்டனர். கே. எம். முன்ஷி – கோபாலசாமி அய்யங்கார் ஆகியோரால் வடிவமைக்கப் பட்ட இவ்வொப்பந்தத்தால் இந்தியும் ஆங்கிலமும் இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகளாயின.