![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f3/Surrender_of_The_City_of_Madras_1746.jpg/640px-Surrender_of_The_City_of_Madras_1746.jpg&w=640&q=50)
முதலாம் கர்நாடகப் போர்
From Wikipedia, the free encyclopedia
முதலாம் கர்நாடகப் போர், 1746–1748 காலகட்டத்தில் நடைபெற்றது. ஆற்காடு நவாப், ஐதராபாத் நிசாம் போன்ற தென்னிந்திய ஆட்சியாளர்களிடையே ஆட்சித் தலைமை ஆசையால் ஏற்பட்ட மோதல்களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பிரஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலையிட்டு வந்தன.
முதலாம் கர்நாடாகப் போர் | ||||||
---|---|---|---|---|---|---|
ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் மற்றும் கர்நாடகப் போர்கள் பகுதி |
||||||
![]() 1746 மதராஸ் சண்டையில் பிரித்தானியர் புனித ஜார்ஜ் கோட்டையை, பிரான்சுப் படைகளிடம் இழத்தல் |
||||||
|
||||||
பிரிவினர் | ||||||
![]() | ![]() | ![]() |
||||
தளபதிகள், தலைவர்கள் | ||||||
அன்வர்தீன் கான் முகமது அலி கான் வாலாஜா | டூப்ளே பெர்ட்ராண்ட் பிரான்க்காய்ஸ் | ஸ்டிரிங்கர் லாரன்ஸ் எட்வர்டு பைத்தான் எட்வர்டு போஸ்கவென் |
முகலாயப் பேரரசு வலுவிழந்த பின்னர் கர்நாடகப் பகுதி, தில்லி முகலாய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி தன்னாட்சியுடன் செயல்படத் தொடங்கியது. பெயரளவில் ஐதராபாத் நிசாம் இப்பகுதியை ஆண்டு வந்தார். ஆனால் உண்மையில் ஆற்காடு நவாப் தோஸ்த் அலி கானின் கட்டுப்பாட்டில் கர்நாடகப் பகுதிகள் இருந்தன. அவரது இறப்பிற்குப் பின் யார் இப்பகுதியை ஆள்வது என்பது குறித்த மோதல்கள் உருவானது. ஐதராபாத் நிசாமின் மருமகன் சந்தா சாகிப்பும் மற்றும் ஆற்காடு நவாப் அன்வர்தீன் முகமது கானும் கருநாடக நவாபாக முயன்றனர். இருவருக்குமிடையே மூண்ட போரில் சந்தா சாகிபுக்கு ஆதரவாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனியும், ஆற்காடு நவாப்புக்கு ஆதரவாக பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியும் களமிறங்கின.
1748 இல் ஐரோப்பாவில் மூண்ட ஆசுத்திரிய வாரிசுரிமைப் போரின் பகுதியாக தென்னிந்தியாவிலும் இரு ஐரோப்பிய நிறுவனங்களும் மோதிக் கொண்டது. பிரஞ்சு ஆளுனர் தூப்ளேயின் பிரெஞ்சுப் படைகள், 1746 இல் மதராஸ் சண்டையில் பிரித்தானியரிடமிருந்து சென்னை மற்றும் கடலூர் பகுதிகளைக் கைப்பற்றியது. அடுத்து நடைபெற்ற அடையாறு சண்டையில் ஆற்காடு நவாபின் படைகளைத் தோற்கடித்தன. இப்போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு வித்திட்டது.
1748இல் ஐக்ஸ் லா ஷப்பேல் ஒப்பந்த்தின் மூலம் ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, தென்னிந்தியாவிலும் அமைதி திரும்பியது