மீயியற்கை
From Wikipedia, the free encyclopedia
மீயியற்கை, மீ இயல், இயற்கையைக் கடந்தது, அல்லது இயற்கைக்கு மீறியது (supernatural; மத்திய இலத்தீன்: supernātūrālis: supra "மேல்" + naturalis "இயற்கை", முதலாவது பயன்பாடு: கி.பி 1520–30)[1][2] என்பது பௌதீக விதியுடன் தொடர்புபடாத அல்லது இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதென்றால், இயற்கைக்கு அப்பாலும் அதற்கு மேல் இருக்கும் விடயமுமாகும்.
மெய்யியற் பண்புகளான புதிய பிளேட்டோவியல்[3], புலமைவாதம்[4] என்பவற்றில் மீயியற்கை இடம்பெற்றுள்ளது. பல சமயங்களில் மீயியற்கை உள்வாங்கப்பட்டுள்ளதோடு, இது இயல்பு கடந்த நிலையிலும் மறைபொருள் நிலையிலும் இடம்பெற்றுள்ளது.