மீன் மழை
வானியலின் அரிய நிகழ்வு / From Wikipedia, the free encyclopedia
மீன் மழை அல்லது விலங்கு மழை என்பது வானிலையில் ஒரு அரிதான நிகழ்வு ஆகும். பறக்க இயலாத விலங்குகள் மழையின்போது வானில் இருந்து மழையுடன் சேர்ந்து விழுவது ஆகும். இது போன்ற சம்பவங்கள் வரலாறு முழுவதும் பல நாடுகளில் நடந்ததாக தகவல்கள் உள்ளன.[1] இது எதனால் ஏற்படுகிறது என்றால், ஒரு கருத்தின்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின்போது கூடவே வேகமாக மாறும் வானிலை மாற்றத்தின்போது ஏற்படும் நீர்ப்பீச்சு என்பதுதான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது கடல் அல்லது ஏரி போன்றவற்றின் மேற்பரப்பில் திடீரென்று காற்று சூடாகும்போது அது விரைந்து மேலெழும்பும். இவ்வாறு காற்று மேலெழும்பும்போது அந்த வெற்றிடத்தை நோக்கி கடல்நீர் எழும்பிவரும். இவ்வாறு கடல்நீர் உறிஞ்சப்படுகையில் அதனுடன் சேர்த்து அப்பகுதியில் வாழும் தவளைகள், மீன்கள், சிப்பிகள் போன்றவை என எல்லாம் நீருடன் சேர்ந்து மேலெழும்பி காற்றுடன் பயணப்பட்டு சிறிது தொலைவில் கடலிலோ அல்லது கடற்கரை நகரங்களிலோ மழையாய் பொழியும்.[1][2] எனினும், இது இந்த நிகழ்வு குறித்த அறிவியலாளர்களின் அணுமானமே, இதற்கு இதுவரை அறிவியலில் சான்று இன்னும் கணப்படவில்லை.[3]