மீநாயகன் புனைகதை
புனைகதை வகை / From Wikipedia, the free encyclopedia
மீநாயகன் புனைகதை அல்லது சூப்பர்ஹீரோ புனைகதை (Superhero fiction) என்பது மீநாயகன்கள் என்று அழைக்கப்படும் தனித்துவப்பட்ட ஆடை அணிந்து குற்றங்களுக்கு எதிராக சாகசங்கள், ஆளுமைகள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்டுள்ள புனைகதைகளின் வகையாகும். இவர்களின் பாத்திரம் தங்கள் பிரபஞ்சத்திற்கு சூப்பர் வில்லன்களிடமிருந்து ஏற்படும் தீமையை எதிர்த்துப் போராடுவதற்கும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக அமெரிக்க காமிக் புத்தகங்களுடன் தொடர்புடையது, இருப்பினும் இது தழுவல்கள் மற்றும் அசல் படைப்புகள் மூலம் பிற ஊடகங்களில் விரிவடைந்துள்ளது.