மின்னணு போர்
From Wikipedia, the free encyclopedia
போர்கள் இன்றைய காலங்களில், கப்பல்கள், வானூர்திகள் மற்றும் தரைப்படைகளால் நிகழ்த்தபடுகிறது. மிக முக்கியமாக, ஒரு நாட்டின் வெற்றி என்பது அந்த நாட்டிடம் எதிரி நாட்டின் படையின் போர்கருவிகளை பற்றிய அறிவை சார்ந்தது. எதிரியின் போர்கருவிகளின் வலிமையை கொண்டு போர்புரியும் யுக்தி நிர்ணயிகப்படுகிறது. இதில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது மின்னணு போர் (Electronic Warfare) முறை. சொல்லபோனால் இது மின்னணு போர் ஆல்ல மாறாக இது மின்காந்தக் கதிர்வீச்சு அலைகளை சார்ந்தது. எதிரி போர்கருவிகளின் மின்காந்த அலைகளை எப்படி நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறோமோ அதை பொருத்து போரில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கபடுகிறது. மின்னணு போர் முறையில் மின்சுற்று (Electronic Circuit) உபயோகபடுத்தபடுகிறது.[1] இந்த மின்காந்த அலைகளில் உள்ள தகவல்களை பயன்படுத்தி எதரிகளின் ஆயுதம் மற்றும் போர் கருவிகள் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். மின்னணு போர் முரை பொதுவாக மூன்று வகைப்படும். 1. மின்னணு ஆதரவு நடவடிக்கை (ESM), 2. மின்னணு தாக்குதல் (ECM), 3. மின்னணு பாதுகாப்பு (ECCM).
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |