![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8d/Manasi_Pradhan.jpg/640px-Manasi_Pradhan.jpg&w=640&q=50)
மானசி பிரதான்
From Wikipedia, the free encyclopedia
மானசி பிரதான் (பிறப்பு: அக்டோபர் 4, 1962) ஒரு இந்திய மகளிர் உரிமை ஆர்வலரும் எழுத்தாளரும் . இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நாடு தழுவிய இயக்கமான பெண்களின் மரியாதைக்கான தேசியப் பிரசாரத்தின் நிறுவனரும் ஆவார். [1] [2] [3] [4] [5] 2014 ஆம் ஆண்டில், மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் உலகளாவிய தலைவரான மேரி பிரேமா பியரிக்குடன், ராணி லாஷ்மிபாய் ஸ்த்ரீ சக்தி புரஸ்கர் விருதினை இவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் வழங்கினார். இவர் 2011 இல் 'சிறந்த பெண்கள் விருதை' வென்றவர் ஆவார். [6] [7] [8]
மானசி பிரதான் | |
---|---|
![]() | |
பிறப்பு | 4 அக்டோபர் 1962 (1962-10-04) (அகவை 61) பனாப்பூர், கோர்த்தா மாவட்டம், ஒடிசா, இந்தியா |
தேசியம் | இந்தியாn |
கல்வி | ஒடிய இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம், சட்டம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | உத்கல் பல்கலைக்கழகம்,ஜி. எம். சட்டக்கல்லூரி, புரி |
பணி | பெண்கள் உரிமை செயல்பாட்டாளர், எழுத்தாளர், கவிஞர் |
அமைப்பு(கள்) | நிர்பயா வாகினி, OYSSபெண்கள், நிர்பயா சமாரோ. |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | உர்மி- ஓ- உச்வாஸ், ஆகாஷ் தீப, சுவாகதிகா. |
அரசியல் இயக்கம் | பெண்களின் மரியாதைக்கான தேசியப் பிரச்சாரம் |
விருதுகள் | 2013, ஸ்த்ரீ சக்தி புரஸ்கார், 2011-இன் சிறந்த பெண்மணி |
பண்னாட்டு செய்தி வெளியீடுகள் மற்றும் அமைப்புகளில் மானசி பிரதான் அடிக்கடி இடம்பெறுகிறார். 2016 ஆம் ஆண்டில், நியூயார்க்கை தளமாகக் கொண்ட பஸ்டில் (இதழ்) அவரை மிகவும் ஊக்கமளிக்கும் 20 பெண்ணிய ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்களில் ஒருவராக பட்டியலிட்டது. [9] 2017 ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த வெல்கர் மீடியா ஐ.என்.சி.பெண்ணிய மாற்றத்தை உருவாக்கும் சக்திவாய்ந்த பன்னிரண்டு பெண்களுள் ஒருவராக அவரைப் பட்ட்டியலிட்டது. [10] 2018 ஆம் ஆண்டில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆக்ஸ்போர்டு ஒன்றியத் தொழிற்சங்கம் இவரை உரையாற்ற அழைத்தது. [11] [12] [13] [14]
அவர் நிர்பயா வாகினி, நிர்பயா சாமரோ மற்றும் OYSS பெண்கள் ஆகியவற்றின் நிறுவனர் ஆவார். இந்திய திரைப்படத் தணிக்கை வாரியம் ,[15] தேசிய மகளிர் ஆணையம் ஆகியவற்றின் விசாரணைக் குழுவில் பணியாற்றியுள்ளார்.
ஒடிசாவின் தொலைதூர கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர், பெண்கள் கல்வி கற்பதற்கு எதிராகப் பரவலாகப் பரவியுள்ள சமூகத் தடைகளை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடினார். மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் சதுப்பு நிலத்தின் மத்தியில் தனது பகுதியில் இருந்த ஒரே உயர்நிலைப்பள்ளிக்கு தினமும் 15 கி.மீ.நடந்தார், தனது கிராமத்தின் முதல் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்குச் சென்ற பெண் ஆனார். பின்னர் தனது பிராந்தியத்தின் முதல் பெண் சட்டப் பட்டதாரியாகவும் ஆனார். மானசி பிரதானின் எழுச்சியூட்டும் வாழ்க்கைக் கதை அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் ஆவணப்படங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. [16]