மாணிக்கிய வம்சம்
From Wikipedia, the free encyclopedia
மாணிக்கிய வம்சம் ( Manikya dynasty ) என்பது துவிப்ரா இராச்சியத்தின் ஆளும் வீடாக இருந்தது. பின்னர் சுதேச திரிபுரா இராச்சியமாகவும், தற்போது இந்திய மாநிலமான திரிபுராவாகவும் ஆனது. 15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, வம்சம் அதன் உச்சத்தில் இந்திய துணைக் கண்டத்தின் வடகிழக்கில் ஒரு பெரிய பகுதியைக் கட்டுப்படுத்தியது. பிரித்தானிய பேரரசின் செல்வாக்கின் கீழ் வந்த பிறகு, வங்காளதேசத்தில் உள்ள "கொமில்லா" மற்றும் "சிட்டகாங் மலைப்பாதைகள்" இராச்சியத்தின் சில பகுதிகளை இழந்தது.
1761 ஆம் ஆண்டில், நிலப்பிரபுத்துவவாதிகளாக இருந்த இவர்கள் ஒரு சுதேச அரச ஆட்சியாளர்களாக மாறினார்கள். இருப்பினும் மாணிக்கியர்கள் 1949 வரை இப்பகுதியின் கட்டுப்பாட்டை வைத்திருந்தனர். பின்னர், இது இந்தியாவுடன் இணைந்தது.