மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் (மலாய்:Mahkamah Persekutuan Malaysia; ஆங்கிலம்:Court of Appeal of Malaysia; சீனம்:马来西亚上诉法院) என்பது மலேசிய நீதித்துறை அமைப்பில் உள்ள உயர்நிலை நீதிமன்றமாகும். நீதித்துறைப் படிநிலை அமைப்பில் மலேசிய உச்சநீதிமன்றத்திற்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாவது உயர் நீதிமன்றமாகும். இது புத்ராஜெயாவில் உள்ள மலேசிய நீதி அரண்மனை வளாகத்தில் (Palace of Justice) உள்ளது.
மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் | |
---|---|
Court of Appeal of Malaysia Mahkamah Rayuan Malaysia | |
புத்ராஜெயா, மலேசிய நீதி அரண்மனையில் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் | |
நிறுவப்பட்டது | 1994 |
அமைவிடம் | மலேசிய நீதி அரண்மனை (Palace of Justice Malaysia), புத்ராஜெயா, மலேசியா |
புவியியல் ஆள்கூற்று | 2°55′48″N 101°41′24″E |
நியமன முறை | மலேசியப் பிரதமரின் ஆலோசனையுடன் அரச நியமனம் |
அதிகாரமளிப்பு | மலேசிய அரசியலமைப்பு |
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடு | மலேசிய உச்சநீதிமன்றம் |
நீதியரசர் பதவிக்காலம் | 66 வயதில் கட்டாய ஓய்வு |
இருக்கைகள் எண்ணிக்கை | 33 |
வலைத்தளம் | www |
மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் | |
தற்போதைய | அபாங் இசுகந்தர் அபாங் அசீம் (Abang Iskandar Abang Hashim) |
பதவியில் | 17 January 2023 |
இந்த நீதிமன்றம் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவரால் (President of the Court of Appeal of Malaysia) வழிநடத்தப்படுகிறது. மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவி, மலேசிய நீதித்துறையில் மலேசியத் தலைமை நீதிபதிக்குப் பிறகு இரண்டாவது நிலையில் மிக மூத்தப் பதவியாக உள்ளது.
17 சனவரி 2023-இல், அபாங் இசுகந்தர் அபாங் அசீம் என்பவர் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக யாங் டி-பெர்டுவான் அகோங் முன்னிலையில் பதவியேற்றார். மலேசியாவின் முதல் பெண் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ரோகானா யூசுப், 2022-ஆம் ஆண்டில் ஓய்வு வயதை எட்டியதும் அபாங் இசுகந்தர் அபாங் அசீம் புதிய தலைவராகப் பதவியேற்றார்.[1]