மலட்டுத்தன்மை
From Wikipedia, the free encyclopedia
மலட்டுத்தன்மை (Infertility) என்பது ஒரு மனிதனால் , விலங்கினால் அல்லது தாவரத்தினால் இயற்கை வழியில் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்கவல்ல கருக்கட்டல் என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சில சமயம் கருத்தரிப்பின்போது, வளர்ந்து வரும் கருவை முழுமையான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல மருத்துவ சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத்தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது[3]. இவற்றை மலட்டுத்தன்மை சிகிச்சை எனலாம்.
மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கருக்கட்டும் தன்மை காணப்படும். மாதவிடாய் சுழற்சியின் ஏனைய நாட்களில் இவ்வாறான கருக்கட்டும் தன்மை காணப்படுவதில்லை.
மலட்டுத்தன்மை | |
---|---|
சிறப்பு | சிறுநீரகம், பெண் நோயியல் |
நிகழும் வீதம் | 113 மில்லியன் (2015)[1] |