From Wikipedia, the free encyclopedia
மராத்தியர்களின் வங்களப் படையெடுப்புகள் (1741-1751)[8][9]முகலாயப் பேரரசின் கீழிருந்த வங்காளப் பகுதிகளை (இன்றைய வங்காளதேசம், மேற்கு வங்காளம், பிகார், ஒடிசா பகுதிகள்) வங்காள நவாபுகள் ஆண்டு வந்தனர். மராத்திய கூட்டமைப்பு படைகள் நாக்பூர் இராச்சிய மன்னர் ரகோஜி போன்சலே தலைமையில்[10] ஆகஸ்டு 1741 முதல் மே 1751 வரை வங்காளத்தின் மீது ஆறு முறை படையெடுத்தனர். போர்களில் இது வங்காளத்தில் பரவலான பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. 1751ல் இரு தரப்புக்கும் இடையே போர் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. [11]
மராத்திய பேரரசின் படையெடுப்புகள் பகுதி | |||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
மராத்திய கூட்டமைப்பு | வங்காள நவாபுகள் | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
ரகோஜி போன்சலே பாஸ்கர் பண்டிட் † ஜனோஜி போன்சலே சபாஜி போன்சலே | அலிவர்தி கான் கோபால் சிங்க தேவ்[4] மிர் ஜாஃபர் சித்ரசென் ராய் [5] ராய் துர்லபம் குலாம் முஸ்தபா கான் அதௌல்லா கான் செயினுதீன் அகமது கான் அப்துஸ் சலாம் சேக் மசூம் சையது அகமது கான் |
||||||||
பலம் | |||||||||
40,000[6] (in 1742) 12,000[7] (1748ல்) | 15,000 குதிரைப்படையினர் மற்றும் and 8,000 துப்பாக்கிப் படையினர்[7] (1748ல்) | ||||||||
இழப்புகள் | |||||||||
தெரியவில்லை | தெரியவில்லை |
போர் அமைதி ஒப்பந்தத்தின்படி, போர் ஈட்டுத் தொகையாக வங்காள நவாபுகள் ரூபாய் 1.2 மில்லியன் மராத்தியர்களுக்கு செலுத்த ஒப்புக் கொண்டது.[1][12][13]மேலும் மராட்டியர்கள் வங்காளத்தின் மீது மீண்டும் படையெடுப்பதில்லை என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. [1][13] நிலுவையாக இருந்த முந்தைய போர் ஈட்டுத் தொகை ரூபாய் 3.2 மில்லியன் செலுத்த வங்காள நவாபு ஒப்புக் கொண்டார்.
1758ம் ஆண்டில் நடுவில் பிளாசி சண்டையின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வங்காளத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை, வங்காள நவாபுகள் ஆண்டுதோறும் மராத்தியர்களுக்கு திறை செலுத்தினார்.[14]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.