மரக்கலம்
From Wikipedia, the free encyclopedia
பண்டைய தமிழர் கடல் வாணிகத்துக்குப் பயன்படுத்திய கப்பலைக் கலம் என்றனர். இது மரத்தால் செய்யப்பட்டிருந்ததால் பிற்காலத்தவர் பொருள் விளங்கும் வகையில் மரக்கலம் எனக் குறிப்பிடலாயினர். வங்கம் என்னும் சொல்லும் இதனைக் குறிக்கும். கடலில் மீன் பிடிப்போரின் மிதவைகளையும் கலம் என்றனர். ஆற்றைக் கடக்க உதவும் மிதவைகளைத் தோணி, பரிசல் படகு என்றெல்லாம் குறிப்பிட்டனர்.