மகரந்தம்
From Wikipedia, the free encyclopedia
மகரந்தம் என்பது, நுண்ணியது முதல், சற்றுப் பருமனானது வரையிலான மகரந்தமணிகளைக் கொண்ட ஒரு தூள் ஆகும். வித்துத் தாவரங்களில், இந்த மகரந்தமணிகளுள் ஆண் பாலணுக்கள் உற்பத்தியாகின்றன. மகரந்த மணிகள் ஒரு பூவில் இருந்து இன்னொரு பூவுக்கு எடுத்துச் செல்லப்படும்போது, பாலணுக்களைப் பாதுகாப்பதற்காக மகரந்த மணிகளைச் சுற்றிக் கடினமான பூச்சு ஒன்று மூடியிருக்கும். பல மணிகள் சேர்ந்த மகரந்தத்தூளை வெறும் கண்ணால் பார்க்க முடியுமானாலும், ஒவ்வொரு சிறுமணியையும் விவரமாகப் பார்ப்பதற்கு உருப்பெருக்கி அல்லது நுண்நோக்கியின் துணை தேவைப்படும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |