பொட்டு
From Wikipedia, the free encyclopedia
பொட்டு தெற்கு ஆசியா, (குறிப்பாக இந்தியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை மற்றும் மொரிசியசு)[1] மற்றும் தென்கிழக்காசியாவில் நெற்றியில் அணியும் அலங்காரமாகும். வழமையாக பெண்களால் முன்நெற்றியில் புருவங்களுக்கிடையே சிவப்பு வண்ணத்தில் வட்ட வடிவில் இது வைத்துக் கொள்ளப்படுகின்றது. இருப்பினும் மற்ற வண்ணங்களிலும் மற்ற வடிவமைப்புகளிலும் சின்னங்களுடனோ இல்லாமலோ நகையுடனோ இது அணிந்து கொள்ளப்படுகிறது. திருமணமான பெண்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக் கொள்வதும் விதவைகள் வெறும் நெற்றியுடன் இருப்பதும் பண்டைய பண்பாடாக இருந்தது; தற்போது உடைக்கு ஏற்பவே அணிந்து கொள்ளப்படுகின்றது.