பேலூர் மடம்
இராமகிருஷ்ண இயக்கத்தின் தலைமையகம் / From Wikipedia, the free encyclopedia
பேலூர் மடம் ( Belur Math ) இராமகிருஷ்ணரின் தலைமைச் சீடரான விவேகானந்தரால் நிறுவப்பட்ட இராமகிருஷ்ண இயக்கத்தின் தலைமையகம் ஆகும். இது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள பேலூரில் ஊக்லி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. [1] இங்கே அமைந்துள்ள கோயில் இராமகிருஷ்ண இயக்கத்தின் மையமாக உள்ளது. அனைத்து மதங்களின் ஒற்றுமையின் அடையாளமாக இந்து, இசுலாமிய, பௌத்த மற்றும் கிறித்தவக் கலை மற்றும் உருவகங்களை இணைக்கும் கட்டிடக்கலைக்கு இந்த மடம் குறிப்பிடத்தக்கது. 2003 ஆம் ஆண்டில், பேலூர் மடத்தின் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பேலூர் மடம் தொடர் வண்டி நிலையமும் திறக்கப்பட்டது. [2]
விரைவான உண்மைகள் பேலூர் மடம், அமைவிடம் ...
பேலூர் மடம் | |
---|---|
இராமகிருஷ்ண பேலூர் மடம், ஹவுரா | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மேற்கு வங்காளம் |
மாவட்டம்: | ஹவுரா |
அமைவு: | பேலூர் |
ஆள்கூறுகள்: | 22°37′57″N 88°21′23″E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்து, கிறிஸ்தவம் இசுலாம் ஆகியவற்றின் கருப்பொருள் |
கல்வெட்டுகள்: | ஏதுமில்லை |
வரலாறு | |
அமைத்தவர்: | இராமகிருசுண இயக்கம் |
இணையதளம்: | belurmath |
மூடு