பேராதனை தாவரவியற் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
பேராதனை தாவரவியற் பூங்கா (Royal Botanical Gardens, Peradeniya) இலங்கையிலுள்ள மிகப் பெரிய தாவரவியற் பூங்கா ஆகும். இது இலங்கையின் சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதுடன், நிறைந்த கல்விப் பெறுமானமும் கொண்டது. ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இது இருந்து வருகிறது.
விரைவான உண்மைகள் பேராதனை தாவரவியற் பூங்கா, வகை ...
பேராதனை தாவரவியற் பூங்கா | |
---|---|
பேராதனை தாவரவியற் பூங்காவின் ஒரு தோற்றம் | |
வகை | தாவரவியற் பூங்கா |
அமைவிடம் | பேராதனை, இலங்கை |
ஆள்கூறு | 7°16′16″N 80°35′44″E |
பரப்பு | 147 ஏக்கர்கள் (59 ha) |
உருவாக்கப்பட்டது | சுமார் 1750ல் |
Operated by | தேசியப் பூங்காக்ககள் திணைக்களம் |
நிலை | Open all year |
Website | Official Website |
மூடு
மத்திய மாகாணத்தில் இருக்கும் கண்டி நகரத்தின் மேற்குத் திசை நோக்கிச் செல்கையில் 5.5 கி.மீ தூரத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பலவு 147 ஏக்கராக இருப்பதுடன், விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த தேசியப் பூங்காக்களுக்கான பிரிவினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.