பேரரசி சுய்கோ
From Wikipedia, the free encyclopedia
பேரரசி சுய்கோ (推古天皇, சுய்கோ-டென்னோ) (554 - 15 ஏப்ரல் 628) பாரம்பரிய வரிசைப்படி சப்பானின் 33வது மன்னராக இருந்தார்.[1] சுய்கோ 593 முதல் 628 இல் இறக்கும் வரை ஆட்சி செய்தார்.[2] சப்பான் வரலாற்றில், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற எட்டு பெண்களில் சுய்கோ முதல்வராவார் . சுய்கோவுக்குப் பிறகு ஆட்சி செய்த ஏழு பெண்கள் கோக்யோகு, ஜித்தோ, ஜென்மெய், ஜென்ஷோ, கோகென்/ஷோடோகு, மீஷோ மற்றும் கோ-சகுராமாச்சி.