பெருநிலவு
From Wikipedia, the free encyclopedia
பெருநிலவு (Supermoon) என்பது ஒரு முழுநிலவு அல்லது புதுநிலவு நாளில் நிலவு புவிக்கு மிக அருகில் வரும்போது ஏற்படும் நிகழ்வாகும். இதன் அறிவியல் பெயர் புவி-நிலவு-கதிரவன் அமைப்பின் புவியண்மை இணைவு என்பதாகும்.
நிலவு புவியை ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. எனவே அது ஒரு சில நேரங்களில் புவிக்கு அருகிலும் சில நேரங்களில் புவியை விட சற்று தொலைவிலும் இருக்கும், அப்படி அண்மைநிலையில் நிலவு இருக்கும் பொழுது முழுநிலவாக இருந்தால் அன்றைக்கு நிலவு வழக்கத்தை விட 14 மடங்கு பெரிதாகவும், 30 மடங்கு ஒளிர்வுடனும் அதுவே பெருமுழுநிலவு என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் நான்கு முதல் ஆறு பெருநிலவுகள் தோன்றும்..[1][2]
புதுநிலவு நாட்களில் ஏற்படும் பெருநிலவு பெருப்புதுநிலவு என்று அழைக்கப்படுகிறது. இதை முழுமையான கதிரவ மறைப்பின் உச்ச நிலையின் போது காண இயலும். மார்ச் 20, 2015, முழுமையான கதிரவ மறைப்பு ஒரு பெருப்புதுநிலவு நாளில் நிகழ்ந்தது.[3]
புவிக்கு மிக தொலைவில் நிலவு வரும்போது குறுநிலவு (micromoon) என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் புவிச்சேய்மை இணைவு என்பதாகும்.