பெருநற்கிள்ளி, இராசசூயம் வேட்ட சோழன்
From Wikipedia, the free encyclopedia
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன் ஆவான். இவனைப் பாடிய புறநானூற்றுப் பாடல்கள் நான்கு உள்ளன. இராசசூயம் என்பது நாட்டை விரிவுபடுத்த அரசன் செய்யும் வேள்வி.
- பகைநாட்டை இவன் பட்டப்பகலில் தீயிட்டுக் கொளுத்தியது ‘சுடுதீ விளக்கம்’ [1] இவனது யானைகள் வள்ளை, ஆம்பல் பகன்றை, பாகல், கரும்பு நிறைந்த பகை நாட்டு வயல்களைப் பாழாக்கினவாம்.[2]
- இவனுக்கும், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, மலையமான் திருமுடிக்காரி சோழனுக்கு உதவியாக நின்று போரிட்டுச் சோழனுக்கு வெற்றி உண்டாக்கியிருக்கிறான்.[3]
- சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய இருவரும் இவனது நண்பர்கள். இவர்கள் பார்பனர் வளர்க்கும் முத்தீப் போல ஓரிடத்தில் கூடியிருந்தனர்.[4]
- மணியும், முத்தும், பொன்னும் இரவலர்களுக்குக் கனவா நனவா என மருளும்படி வாரி வழங்கியவன்.[5]