பூர்ணியா
From Wikipedia, the free encyclopedia
பூர்ணியா என்பது பீகாரின் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள நகரம். இது இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இந்த நகரம் பூர்ணியா மாவட்டம் மற்றும் பூர்ணியா பிரிவு ஆகியவற்றின் நிர்வாக தலைமையகமாக செயற்படும் நகரமாகும். இது வடகிழக்கு பீகாரில் கோசி-சீமஞ்சல் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. பூர்ணியா நகர்ப்புற ஒருங்கிணைப்பின் மொத்த பரப்பளவு 92 கிமீ 2 (35.52 சதுர மைல்) ஆகும். நகரத்தில் சனத்தொகை அடர்த்தி ஒரு கி.மீ சதுரத்திற்கு 3058 நபர்கள் வசிக்கிறார்கள். இது பீகாரின் ஐந்தாவது பெரிய நகரமாகும். பாட்னாவில் இருந்து கிட்டத்தட்ட 302 கிலோமீட்டர் தொலைவிலும், சிலிகுரியில் இருந்து 171 கி.மீ தொலைவிலும், பாகல் பூரில் இருந்து 90 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கொத்தாவில் இருந்து 450 கி.மீ தொலைவில் காணப்படுகிறது.