பூஞ்சையிழை
From Wikipedia, the free encyclopedia
பூஞ்சையிழை பூஞ்சைகளின் ஒரு பதிய வளர்ச்சிப் பாகம் அல்லது பூஞ்சை போன்று கிளைகொண்ட திணிவுகளையும் நூல் போன்ற இழைகளையும் கொண்ட பாக்ரீரிய குடி ஆகும். இந்த இழையமைப்பு கொண்ட திணிவு சில வேளை சைறோ(shiro) என அழைக்கப்படும். இந்தப்பூஞ்சையிழைகளுடனான பூஞ்சை குடியேற்றத்தை மண்ணின் உள்ளேயும் மேலேயும் மற்றும் ஏனைய கீழ்ப்படைகளிலும் காணலாம்.
பூஞ்சைகள் சூழலில் இருந்து போசணையை உறுஞ்சிக் கொள்வதற்கு பூஞ்சையிழையினைப் பயன்படுத்துகின்றது. இது இரண்டு செயன்முறைகளினூடாக நடைபெறுகின்றது. முதலாவது இழைகள் உணவுகளின் மீது நொதியத்தைச் சுரக்கும். இந்த நொதியம் உணவிலுள்ள உயிரியல் பல்பகுதியங்களை அதன் சிறிய அலகான ஒருபகுதியமாக உடைக்கின்றது. இந்த ஒருபகுதியச் சேர்வைகள் பூஞ்சையிழை ஊடாக பரவல் மூலம் உறுஞ்சப்படும்.
தரை, மற்றும் நீர்ச் சூழல் தொகுதிகளில் தாவரங்களின் பிரிந்தழிகைச் செயற்பாடில் பூஞ்சையிழைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மண்ணின் சேதனமுறை பிரிகைக்கும் கரியமில வாயுவை வெளியிடும் கார்பன் வட்டத்திலும் பூஞ்சையிழைகள் பயன்படுகின்றன.
வன்மையான தாவரங்கள் மண்ணில் நிலை நிறுத்தப்படுவதில் பூஞ்சை இழைகள் இணைக்கும் பாகங்களாக தொழிற்படுவதால் அவை மழையினால் அடித்துச் செல்லப்படாமல் தடுக்கப்படும்.
"பூஞ்சையிழைகள்" என்பதை கூறிக்கும் பதமான Mycelium, பங்கசுக்கள்(fungus) போன்று ஒரு திரள் பெயராக கருதப்படுகின்றது. ஒருமை பன்மை குறிப்பிட முடியாத பெயராக கொள்ளலாம். பூஞ்சையிழை (mycelia), பங்கசு (fungi) போன்று ஒருமைப் பெயராகும்.
ஸ்குலேரொசியா என்பது இறுக்கமான அல்லது கடினமான பூஞ்சையிழைத் திணிவாகும்.