புவி சூடாதலின் விளைவுகள்
From Wikipedia, the free encyclopedia
புவி சூடாதலின் விளைவுகள் மனித வாழ்விற்கும் சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு (IPCC) தங்களது கடைசி அறிக்கையில் குறிப்பிட்டதை விட வேகமாக புவி சூடாதல் நிகழுமென எதிர்வு கூறியுள்ளது.
புவியின் மேற்பரப்பானது வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருவதையே புவி சூடாதல் என்று கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை இன்று உலக நாடுகளினது கவனத்தை ஈர்த்துள்ளது. 1850 இன் பின்னர் புவியின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை 10 பாகை செல்சியஸ் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே வேளை வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைடின் செறிவும் 28 வீதமாக அதிகரித்துள்ளது.
சுற்றுப்புற சூழலையும் தட்ப வெட்ப நிலை மாற்றமும்[1], புவி வெப்பமடைதலும் மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. வெப்பநிலையை பதிவுசெய்யும் கருவிகள் கொண்டு தட்பவெட்ப நிலை மாற்றத்தைக் கணக்கிட்டு பெற்ற முடிவுகளின் படி, கடல் மட்ட அளவு உயருதல்|கடல் மட்டம் உயர்வதற்கும், வடதுருவத்தில் பனியளவு குறைவதற்கும் ஆதாரங்களாக உள்ளது[2]. சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் நான்காம் மதிப்பீடு அறிக்கை, "உலகளாவிய சராசரி வெப்பநிலை இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் உயர்வடைந்துள்ளது [பெரும்பாலான இடங்களில்] என்பதற்குக் காரணம் மனிதனால் அதிக அளவில் பயன் படுத்தப்படும் பைங்குடில் வளிமங்களால் தான்." என்று தெரிவிக்கிறது. வருங்கால தட்ப வெட்ப நிலை மாற்றங்கள் பூமியை இன்னும் வெப்பமடையச் செய்யும் (அதாவது, உலகளாவிய இடைப்பட்ட வெப்பநிலை மேல் போக்கில் சென்று கொண்டிருக்கிறது), கடல் மட்டத்தை உயரச் செய்யும், தீவிர தட்பவெட்பநிலையை உண்டாக்கும் நிகழ்வுகளை அடிக்கடி ஏற்படச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தட்ப வெட்ப நிலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது சூழல் மண்டலம். மனிதர்கள் வருங்கால தட்ப வெட்ப நிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள சிரமப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.[3] இந்த தட்ப வெட்ப மாற்றங்களால் நடை பெறவிருக்கும் அபாயங்களைத் தடுக்க நிறைய நாடுகள், பைங்குடில் வளிமங்களைக் குறைக்க சட்டம் கொண்டு ஆதரிக்க பொது கொள்கைகள் கொண்டுள்ளன.