![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7c/Jaundice_in_newborn.jpg/640px-Jaundice_in_newborn.jpg&w=640&q=50)
புத்திளங்குழந்தை மஞ்சள் காமாலை
அதிக பிலிரூபின் அளவு காரணமாக புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை / From Wikipedia, the free encyclopedia
பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை என்பது அதிக பிலிரூபின் அளவு காரணமாக புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை ஆகும். இதன் அறிகுறிகள் கண் மற்றும் தோலின் வெண்மையான நிறம் மாறி மஞ்சள் நிறமாகும்.[1] மற்ற அறிகுறிகளில் அதிக தூக்கம் அல்லது குறைவான உணவு ஆகியவை இருக்கலாம். இதன் காரணமாக வலிப்பு நோய் சார் தாக்கங்கள், பெருமூளை வாதம் அல்லது காமாலை வழி மூளைநோய் ஆகியவை இருக்கலாம்.
புத்திளங்குழந்தை மஞ்சள் காமாலை | |
---|---|
![]() | |
பிறந்த குழந்தையின் மஞ்சள் காமாலை நோய் | |
சிறப்பு | Pediatrics |
அறிகுறிகள் | தோல்,விழி வெண்படலம் ஆகியவற்றில் மஞ்சள் நிறமாற்றம்[1] |
சிக்கல்கள் | வலிப்பு நோய் பெருமூளை வாதம், மூளை நோய்[1] |
வழமையான தொடக்கம் | Newborns[1] |
காரணங்கள் | செங்குருதியணு முறிதல், கல்லீரல் நோய்கள், தொற்று, தைராய்டு சுரப்புக் குறை, வளர்சிதை மாற்றக் கோளாறுகள்[1][2] |
நோயறிதல் | அறிகுறிகள் மூலம், பிலிருபின் அளவு மூலம் உறுதி செய்யப்படும்[1] |
சிகிச்சை | அடிக்கடி பாலூட்டுதல், ஒளிக்கதிர் சிகிச்சை, குருதி மாற்றீடு[1] |
நிகழும் வீதம் | >புதிதாய்ப் பிறந்த 50% குழந்தைகள்[1] |
பல சந்தர்ப்பங்களில் இதற்கான குறிப்பிட்ட அடிப்படைக் கோளாறு (உடலியல்) எதுவும் இல்லை.[2] மற்ற சந்தர்ப்பங்களில் இது செங்குருதியணு முறிதல், கல்லீரல் நோய், நோய்த்தொற்று,தைராய்டு சுரப்புக் குறை அல்லது வளர்சிதை மாற்றக் கோளாறுகள் (நோயியல்) ஆகியவற்றால் விளைகிறது.[1] இச்சமயங்களில் குழந்தைக்கு 34 க்கும் அதிகமான பிலிரூபின் நிலை μmol / l (2 mg / dL) காணப்படலாம். ஆரோக்கியமான குழந்தைகளில் இதன் அளவு 308 ஐ விட அளவு அதிகமாக இருக்கும்போது கவலைக்கிடமான நிலை ஏற்படுகின்றது μmol / L (18 mg / dL), பிறந்த குழந்தையின் மஞ்சள் காமாலை அதன் வாழ்க்கையின் முதல் நாளிலிருந்தே கவனிக்கப்படுகிறது, பிலிருபின் அளவுகள் விரைவாக உயர்கின்றன, குழந்தை உடல்நிலை சரியில்லாமல் தோன்றும் அல்லது மஞ்சள் காமாலை இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும், குழந்தையுடன் சம்பந்தப்பட்டர்களிடம் இதற்கான அடிப்படைக் காரணத்தைத் தீர்மானிக்க மேலதிக விசாரணைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
சிகிச்சையின் தேவையானது குழந்தையின் பிலிரூபின் அளவு, குழந்தையின் வயது மற்றும் அடிப்படைக் காரணத்தைப் பொறுத்தது.[3] சிகிச்சையில் அடிக்கடி உணவூட்டல், ஒளிக்கதிர் சிகிச்சை அல்லது குருதி மாற்றீடு ஆகிய சிகிச்சைகள் வழங்கப்படும். குறைப்பிரசவம் எனில் மிகவும் தீவிரமான வலிய சிகிச்சை தேவைப்படுகிறது. இவ்வகை மஞ்சள் காமாலை பொதுவாக ஏழு நாட்களுக்குள் நீடிக்கும். இந்த நிலைபிறந்த குழந்தையின் முதல் வாரத்தில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது.[1] புதிதாய்ப் பிறந்த குழந்தைகளில் 80% குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றன.[2] மஞ்சள் காமாலை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 100,000 க்கும் மேற்பட்ட புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் இறக்கின்றனர்.[4]