புதுச்சேரி வரலாறு
From Wikipedia, the free encyclopedia
புதுச்சேரி நகரம் இந்தியாவின் தென்கிழக்கு கடலோரத்தில் உள்ளது. காலனிய காலத்தில் இதன் பழங்கால வரலாறு பற்றி போதுமான அளவு எழுதப்படாத நிலை இருந்தது, டச்சு, போர்த்துகீசிய, ஆங்கிலேய, பிரஞ்சு போன்ற காலனித்துவ சக்திகள் வருகைக்கு பின்னரான புதுச்சேரியின் வரலாறு குறித்த தெளிவான பதிவுகள் எழுதப்பட்டன. அருகிலுள்ள அரிக்கமேடு, அரியாங்குப்பம், காகையன் தோப்பு, வில்லியனூர், பாகூர் ஆகிய பகுதிகள் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியால் தங்கள் பகுதியுடன் இணைக்கப்பட்டன. விடுதலைக்குப் பின்னர் புதுச்சேரியின் சூழல் மாறியது, காலனித்துவ காலத்திற்கு முந்தைய காலத்தின் வரலாறுகள் எழுதப்பட்டன.