![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d9/Bilaspur_in_Himachal_Pradesh_%2528India%2529.svg/langta-640px-Bilaspur_in_Himachal_Pradesh_%2528India%2529.svg.png&w=640&q=50)
பிலாஸ்பூர் மாவட்டம் (இமாசலப் பிரதேசம்)
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பிலாஸ்பூர் இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் சத்லஜ் ஆற்றில் செயற்கையாக உருவாக்கப்பட்ட கோவிந்த சாகர் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் பக்ரா நங்கல் அணைக்கட்டு திட்டத்திற்கு நீர்த்தேக்கமாக பயன்படுகிறது. இந்த ஏரியின் மேல் கன்ராவூரில் உள்ள சாலைப்பாலமானது இந்த வகையில் ஆசியாவிலேயே உயரமானது. இந்த மாவட்டத்தின் தலைமையகம் பிலாஸ்பூர் நகரில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 1,167 கிமீ², மற்றும் மக்கட்தொகை 340,735 (2001 கணக்கெடுப்பின்படி). 2011 கணக்கெடுப்பின்படி இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இது மூன்றாவது அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும்.[1] இம்மாவட்டப் பகுதிகளை கிபி ஏழாம் நூற்றாண்டு முதல் 1950 வரை பிலாஸ்பூர் இராச்சியத்தினர் ஆட்சி செய்தனர். இங்குள்ள நைனா தேவி கோயில் புகழ் பெற்றது.
விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
![]() பிலாஸ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம் | |
மாநிலம் | இமாசலப் பிரதேசம், இந்தியா |
---|---|
தலைமையகம் | பிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசம்) |
பரப்பு | 1,167 km2 (451 sq mi) |
மக்கட்தொகை | 340735 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 292/km2 (760/sq mi) |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு