பிருத்வி அரங்கம்
கபூர் குடும்பத்திற்கு சொந்தமான நாடக அரங்கம் / From Wikipedia, the free encyclopedia
பிரித்வி அரங்கம் ( Prithvi Theatre ) என்பது மும்பையின் ஜூகூவின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள ஒரு அரங்காகும். பாலிவுட்டில் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகர் மற்றும் இயக்குனர் குடும்பங்களில் ஒன்றான பிருத்விராஜ் கபூரின், கபூர் குடும்பம், 1944 இல் 'பிரித்வி தியேட்டர்ஸ்' என்ற நாடக நிறுவனத்தை நிறுவியது. நிறுவனம் பதினாறு ஆண்டுகள் தங்கள் நாடகத்தை பல்வேறு ஊர்களில் நிகழ்த்தியது.[1] இந்த அரங்கம் சசி கபூர் மற்றும் அவரது மனைவி ஜெனிபர் ஆகியோரால் கட்டமைக்கப்பட்டது. சசியின் தந்தை பிருத்விராஜின் நினைவாக, அவர் தனது நாடக நிறுவனத்திற்கு "ஒரு அரங்கம்" வேண்டும் என்று முடிவுசெய்து கட்டிடக் கலைஞர் வேத் செகன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1978 இல் திறக்கப்பட்டது. 1984 இல் ஜெனிபர் இறக்கும் வரை அரங்கதை நிர்வகித்தார். சசி கபூர் அரங்கத்தின் நிர்வாக அறங்காவலராக இருந்தார். மேலும் தினசரி நடவடிக்கைகளை குணால் கபூர் என்பவரைக் கொண்ட ஒரு குழுவுடன் கவனித்து வந்தார்.