பிரிடா காலோ
மெக்சிகோ நாட்டு பெண் ஓவியர் / From Wikipedia, the free encyclopedia
பிரிடா காலோ (Frida Kahlo - சூலை 6, 1907 – சூலை 13, 1954) (பிறப்பு: மக்டலேனா கார்மென் பிரிடா கக்லோ யா காலெரோன்) என்பவர் பன்னாட்டளவில் புகழ் பெற்ற ஒரு மெக்சிக்கோ நாட்டுப் பெண் ஓவியர் ஆவார். இவர் மெக்சிக்கோவின் உள்நாட்டுப் பண்பாட்டுச் செல்வாக்கையும்; உண்மையியம், குறியீட்டியம், அடிமன வெளிப்பாட்டியம் போன்ற ஐரோப்பியக் கலை இயக்கங்களின் செல்வாக்கையும் கொண்ட நாட்டுப்புற கலை பாணியில்; உயிர்ப்புள்ள நிறங்களைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைந்தார். பெரும்பாலான இவரது ஆக்கங்கள், அவருடைய துன்பங்களையும், பெண்ணியத் தன்மையையும் குறியீடாக வெளிப்படுத்தும் தன்னுருவ ஓவியங்கள் (self-portraits) ஆகும். மெக்சிகன் தேசிய மற்றும் பழங்குடி மரபுகளின் அடையாளமாக அவரது படைப்புகள் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது, ஆனால் இதைக்காட்டிலும் பெண் துன்பம் மற்றும் பெண் தன்மையை சமரசமற்றவகையில் சித்தரிப்பது ஆகியவற்றை பெண்ணியவாதிகளால் சிறப்பானவையாக கருதப்படுகிறது.[1]
பிரிடா காலோ | |
---|---|
1932 இல் காலோ | |
பிறப்பு | மக்டலேனா கார்மென் பிரிடா கக்லோ யா காலெரோன் (1907-07-06)6 சூலை 1907 கோயாகன், மெக்சிகோ நகரம், மெக்சிகோ |
இறப்பு | 13 சூலை 1954(1954-07-13) (அகவை 47) கோயாகன், மெக்சிகோ நகரம், மெக்சிகோ |
மற்ற பெயர்கள் | மக்டலேனா கார்மென் பிரிடா கக்லோ யா காலெரோன் |
கல்வி | சுயக் கல்வி |
அறியப்படுவது | ஓவியம் |
அரசியல் இயக்கம் |
|
வாழ்க்கைத் துணை | தெய்கோ ரிவெரா (தி. 1929; ம.மு. 1939) (தி. 1940) |
உறவினர்கள் | கிரிஸ்டினா காலோ (சகோதரி) |
இவரின் தந்தை ஜெர்மானியர், தாயார் ஐரோப்பிய-பூர்வீக மெக்சிகோ கலப்பினத்தைச் சேர்த்தவர், இவரது குழந்தை பருவத்திலிருந்து, வயது முதிர்ந்து வாழ்க்கை கழித்தது அவரது குடும்ப வீடான, கோயோகானில் உள்ள லா கசா அசுல் என்ற வீடாகும். இவருக்கு குழந்தைப் பருவம் போலியோவால் முடக்கப்பட்டது, மேலும் இவரது பதினெட்டு வயதில் மோசமான ஒரு விபத்தில் காயமடைந்தார், இதனால் இவர் தன் வாழ்நாள் முழுவதும் வலி மற்றும் மருத்துவ சிக்கல்களை எதிர்கொண்டார். விபத்துக்கு முன்னர், இவருக்கு மருத்துவக் கல்லூரியின் தலைமையால் மருத்துவக் கல்விக்கு உறுதியளிக்கப்பட்ட மாணவியாக இருந்தார், ஆனால் அதன்பிறகு உயர் கல்வியை கைவிட வேண்டியிருந்தது. கலையானது இவரது குழந்தை பருவத்தில் பொழுதுபோக்காக இருந்தது என்றாலும், காலம் செல்லச்செல்ல தான் ஒரு கலைஞராக மாறுவதை என்ற கருத்தை உணர ஆரம்பித்தார். மேலும் இவர் அரசியலில் ஆர்வம் கொண்டு, 1927 ஆம் ஆண்டு மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சி மூலம், சுவர்ச்சிற்பியான டியாகோ ரிவேராவைச் சந்தித்தார். அவர்கள் 1928 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர், இவர்கள் இருவரும் ஒரே அரசியல் பார்வையைக் கொண்டிருந்ததோடு, ரிவேரா, காலோவின் ஓவிய முயற்சிகளுக்கு உற்சாகமும் கொடுத்து வந்தார். காலோ பல காலமாகவே ஒரு முக்கியமான ஓவியர் என ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தாலும், இவரது ஓவியங்கள் குறித்த பொது விழிப்புணர்வு 1970க்குப் பின்னரே பரவலாக ஏற்பட்டது. மேலும் காலொவின் மரணம் வரை தம்பதியராக இருந்தனர். இவர்களின் திருமண உறவு ஒத்த கொள்கையின் காரணமாக சீராக இருந்தது; அவர்கள் 1940 இல் விவாகரத்து பெற்றனர், ஆனால் அடுத்த ஆண்டே மறுமணம் செய்துகொண்டனர்.
காலோ 1920 களின் பிற்பகுதியிலும், 1930 களின் முற்பகுதியிலும் மெக்ஸிகோ மற்றும் ஐக்கிய மாகாணங்களில் ரிவேராவுடன் பயணம் செய்தார். இந்த நேரத்தில், அவர் ஒரு கலைஞராக தனது சொந்த பாணியை உருவாக்கிக்கொண்டார், மெக்சிகன் நாட்டுப்புற கலாசாரத்தில் இருந்து முக்கிய உத்வேகத்தை பெற்று வரைந்தார். கொலம்பிய மற்றும் கத்தோலிக்க புராணங்களின் கலவையான கூறுகளில் பெரும்பாலும் சிறிய தன்னுருவ ஓவியங்களை வரைந்தார். இவரது ஓவியங்கள் சர்ரியலிஸ்ட் கலைஞரான ஆண்ட்ரே பிரெட்டரின் ஆர்வத்தைத் தூண்டியது, இதனால் 1938 இல் நியூயோர்க்கில் உள்ள ஜூலியன் லெவி கேலரியில் கேலேயின் ஓவியங்களை மட்டுமே கொண்ட தனியான ஒரு ஓவியக் கண்காட்சிக்கு ஆண்ட்ரே பிரெட்டரின் ஏற்பாடு செய்தார். கண்காட்சி வெற்றிகரமானதாக ஆனது, 1939 இல் பாரிஸ் நகரில் அடுத்தடுத்த கண்காட்சி நடந்தது. பிரஞ்சு கண்காட்சி ஓரளவே வெற்றிகரமானதாக இருந்த போதும், இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து ஒரு ஓவியத்தை வாங்கி, அவரகளின் சேகரிப்பில் இடம்பெறவைத்து அந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற முதல் மெக்சிகன் கலைஞரின் ஓவியம் என்ற பெருமையை தந்தனர்.
1940 களில், காலோ மெக்சிகோ மற்றும் அமெரிக்காவிலும் கண்காட்சிகளில் கலந்துகொண்டார். மேலும் அவர் மெக்சிகோ நகரத்தில் இருந்த எஸ்குலா நேஷனல் டி பினிட்ரா, எஸ்குலூராரா ஜி கிராபடோ "லா எமரால்டா" (Escuela Nacional de Pintura, Escultura y Grabado "La Esmeralda") என்னும் ஓவியப் பள்ளியில் கற்பிக்க தொடங்கினார், மேலும் மெக்ஸிக்கோ டி கில்லாரா மெக்ஸிகானாவின் (Seminario de Cultura Mexicana) நிறுவன உறுப்பினர் ஆனார். காலோவின் உடல்நிலையானது எப்போதும் பலவீனமானமானது என்றாலும் அதே தசாப்தத்தில் உடல்நிலை பெருமளவில் குறைந்துவிட்டது. 47 வயதில் அவரது மரணத்திற்கு சற்று முன்பு, 1953 இல் மெக்சிகோவில் அவரது முதல் தனி கண்காட்சி நடந்தது.
1970 களின் பிற்பகுதி வரை காலோ பிரதானமாக ரிவோராவின் மனைவியாக மட்டுமே அறியப்பட்டார், இந்த நிலை கலை வரலாற்றாசிரியர்களாலும் அரசியல் ஆர்வர்களாலும் அவரது ஆக்கங்களைக் கண்டு மறுபரிசீலனை உள்ளாக்கப்பட்டது. 1990 களில், அவர் கலை வரலாற்றில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நபராக மட்டுமல்லாமல், சிகாகோஸ் (மெக்சிகன் அமெரிக்கர் உரிமை இயக்கம்) , பெண்ணியவாதிகள் மற்றும் அகனள், அகனன், ஈரர், திருனர் (LGBTQ) இயக்கத்திற்கான ஒரு அடையாளமாகவும் கருதப்படுகிறார்.
மெக்சிக்கோ நகரத்தின் கோயோவாக்கன் பகுதியில் உள்ள, இவர் வாழ்ந்த "நீல" வீடு இன்று ஒரு அருங்காட்சியகம் ஆகும். இதனை டியேகோ ரிவேரா தான் இறக்கும்போது அன்பளிப்பாகக் கொடுத்தார்.