பிரபோதினி ஏகாதசி
From Wikipedia, the free encyclopedia
பிரபோதினி ஏகாதசி (Prabodhini Ekadashi) தேவோத்தன் ஏகாதசி அல்லது தேவ்தான் என்றும் அழைக்கப்படும், இது இந்து மாதமான கார்த்திகை மாதத்தின் வளர்பிறையின் பதினைந்து நாட்களில் ( சுக்ல ஏகாதசி ) 11வது சந்திர நாள் ஆகும். கடவுள் விஷ்ணு தூங்குவதாக நம்பப்படும் சாதுர்மாத நான்கு மாத காலத்தின் முடிவை இது குறிக்கிறது. விஷ்ணு சயன ஏகாதசியில் தூங்கி, பிரபோதினி ஏகாதசி அன்று விழித்தெழுகிறார் என்று நம்பப்படுகிறது. இதனால் இந்த நாளுக்கு "பிரபோதினி ஏகாதசி" ("பதினொன்றாவது விழிப்பு"), விஷ்ணு-பிரபோதினி ("விஷ்ணுவின் விழிப்பு") , அரி-பிரபோதினி, தேவ-பிரபோதினி, ஏகாதசி, உத்தன ஏகாதசி ("அவரது கண்களைத் திறப்பது"), தியோதன், தேவ உதவ் ஏகாதசி அல்லது தேவுத்தி ஏகாதசி ("கடவுளின் விழிப்பு") என்று அழைக்கப்படுகிறது. திருமணங்கள் தடைசெய்யப்பட்ட சாதுர்மாத முடிவு, இந்து திருமண பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.[1] இது கார்த்திகை ஏகாதசி, கார்த்திக் சுக்ல ஏகாதசி, கார்த்திகை என்றும் அழைக்கப்படுகிறது.[2] கார்த்திகை பூர்ணிமாவை தொடர்ந்து வரும் பிரபோதினி ஏகாதசி நாள் தேவ தீபாவளி அல்லது கடவுள்களின் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது.[3]
பிரபோதினி ஏகாதசி प्रबोधिनी एकादशी | |
---|---|
பிற பெயர்(கள்) | தேவுத்தி ஏகாதசி, உத்தன ஏகாதசி, தியோதன், கார்த்திகை சுக்ல ஏகாதசி |
கடைபிடிப்போர் | குறிப்பாக இந்துக்கள் |
வகை | இந்து |
முக்கியத்துவம் | சாதுர்மாசிய விரதம் முடியும் காலம் |
அனுசரிப்புகள் | விஷ்ணு மீதான பிரார்த்தனைகள், பூசைகள் உள்ளிட்ட மதச் சடங்குகள் |
நாள் | சந்திர நாட்காட்டி |
நிகழ்வு | வருடாந்திரம் |
தொடர்புடையன | சயன ஏகாதசி |
இந்த நாளில்தான் விஷ்ணு துளசி தேவியை மணந்தார் என்றும் நம்பப்படுகிறது.[4]