பிரடெரிக் வில்லியம் டி கிளர்க்
தென் ஆப்பிரிக்க அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் (Frederik Willem de Klerk 18 மார்ச்சு 1936 - நவம்பர் 11, 2021) என்பவர் தென்னாப்பிரிக்க அரசியல்வாதி, நிறவெறி ஆட்சிக்காலத்தில் கடைசி அரசுத் தலைவராக இருந்தவர். இவர் 1989 முதல் 1994 வரை அரசின் தலைவராக இருந்தார். நிறவெறி இனஒதுக்கல் கொள்கையால் நடந்து வந்த ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வந்ததில் பங்களித்தார். டி கிளர்க் தென்னாப்பிரிக்காவின் தேசியக்கட்சியின் தலைவராக 1989 முதல் 1997 வரை பதவி வகித்தார். அப்பர்தாய்ட் என்ற நிறவெறி இனஒதுக்கல் ஆதிக்க முறையை மாற்றி இன வேறுபாடு அற்ற சனநாயக ஆட்சி நடைமுறைக்கு வருவதற்கு நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து செயல்பட்டார்.[1]
விரைவான உண்மைகள் பிரடெரிக் வில்லியம் டி கிளர்க், தனிப்பட்ட விவரங்கள் ...
பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் (1936-03-18)18 மார்ச்சு 1936 ஜோகார்னஸ்பேக், தென்னாப்பிரிக்கா |
இறப்பு | 11 நவம்பர் 2021(2021-11-11) (அகவை 85) கேப் டவுன், மேற்குக் கேப் மாகாணம் , தென்னாப்பிரிக்கா |
இளைப்பாறுமிடம் | caption |
பிள்ளைகள் | 3 |
பெற்றோர் |
|
தொழில் | வழக்கறிஞர் |
கையெழுத்து | |
மூடு