பிரசரானா மலேசியா
From Wikipedia, the free encyclopedia
பிரசரானா மலேசியா (ஆங்கிலம்: Prasarana அல்லது Malaysian Infrastructure Limited; மலாய்: Prasarana Malaysia Berhad) என்பது மலேசிய நிதி அமைச்சுக்கு சொந்தமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் மலேசிய அரசாங்கம் 100% பங்குகளைக் கொண்டுள்ளது. கோலாலம்பூர் நகரின் பொது போக்குவரத்து அமைப்பை மறுசீரமைப்பதற்கான அரசாங்க நடவடிக்கையின் கீழ் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் வகை, முதன்மை நபர்கள் ...
வகை | அரசு சார்ந்த நிறுவனம் |
---|---|
முதன்மை நபர்கள் | டான் ஸ்ரீ சமாலுடின் இப்ராகிம் தலைவர் முகமட் அசருடின் மாட் சா தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். புரொட்யூத் தத் |
தொழில்துறை | பொது போக்குவரத்து. விரைவு இலகு போக்குவரத்துச் சேவை (எல்ஆர்டி), ஒற்றைத் தண்டூர்தி, ரேபிட் பேருந்து, பேருந்து |
சேவைகள் | உரிமையாளர் மற்றும் நடத்துநர் தற்போது: எதிர்காலத்தில்: நடத்துநர் தற்போது: |
பணியாளர் | 8,500+ |
தாய் நிறுவனம் | மலேசிய நிதி அமைச்சு |
மூடு
மலேசிய நிதி அமைச்சு (ஒருங்கிணைத்தல்) சட்டம் 1957-இன் (Minister of Finance Incorporation Act 1957) கீழ் ஒரு நிறுவன அமைப்பாக தொடங்கப்பட்டது. தற்போதைய நிலையில் பிரசரானா மலேசியா, மலேசியாவில் பல வகையான பொது போக்குவரத்துச் சேவைகளை நடத்தி வருகிறது.[2]