பிந்துசாரர்
From Wikipedia, the free encyclopedia
பிந்துசாரர் (Bindusara) மௌரியப் பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். கி.மு. 297 முதல் கி.மு. 273 வரையிலான காலத்தில் இவர் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் சந்திரகுப்த மௌரியரின் மகனும், அசோகரின் தந்தையுமாவார்.[1] இவர் தனது ஆட்சிக்காலத்தில் மௌரியப் பேரரசை மேலும் விரிவுபடுத்திய போதிலும் இவருடைய வாழ்க்கையைப் பற்றிய ஆவணங்கள் குறைவாகவே உள்ளன. இவரைப் பற்றிய தகவல்களில் பெரும்பாலானவை இவரது மரணத்திற்குப் பின் பல நூறு ஆண்டுகளாக எழுதப்பட்ட பழம்பெரும் புராணக்கதைகளில் இருந்து பெறப்பட்டவையாகும்.
பிந்துசாரர் | |
---|---|
அமித்ரகதா | |
பிந்துசாரர் காலத்தைச் சேர்ந்த வெள்ளி நாணயங்கள் (கி.மு. 297 - 273) | |
இரண்டாம் மௌரியப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கி.மு. 297 - 273 |
முடிசூட்டுதல் | கி.மு. 297 |
முன்னையவர் | சந்திரகுப்த மௌரியர் |
பின்னையவர் | அசோகர் |
பிறப்பு | கி.மு. 320 |
இறப்பு | கி.மு. 273 |
துணைவர் | பல மனைவிகள் (மகாவம்சத்தின் படி சுபத்திராங்கி உட்பட 16) சுசிமாவின் தாய் |
குழந்தைகளின் பெயர்கள் | சுசிமா, அசோகர், விதாசோகன் |
அரசமரபு | மௌரியர் |
தந்தை | சந்திரகுப்த மௌரியர் |
தாய் | துர்தாரா (சமண இலக்கியத்தின் படி) |
பிந்துசாரர் தனது தந்தை உருவாக்கிய பேரரசை ஒருங்கிணைத்து பின்னர் தனது நிர்வாகத்தை தென்னிந்தியாவில் பெற்ற பிராந்திய வெற்றிகளால் மேலும் விரிவுபடுத்தினார் என்று 16 ஆம் நூற்றாண்டில் திபெத்திய பௌத்த நூலாசிரியர் தாரானாதர் கூறியுள்ளார்.ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் இந்த கூற்றின் வரலாற்று நம்பகத்தன்மையை சந்தேகிக்கின்றனர்.