பாபநாசம் அணை
From Wikipedia, the free encyclopedia
பாபநாசம் அணை, தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு முக்கிய அணையாகும். இந்த அணையில் 143 அடிவரை நீரைத் தேக்க இயலும். அணையின் கொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடி. பாபநாசம் மலையில் ஆங்கிலேயர் காலத்தில் 1942 இல் இந்த அணை கட்டப்பட்டது. இவ்வணையிலிருந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆறு பாய்கிறது. இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களும் பாசன வசதி பெறுகின்றன[1]. மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் விருதுநகர் ,தென்காசி மாவட்டங்களின் ஆண்டு முழுவதுக்குமான குடிநீர் தேவையை அணை தருகிறது.
விரைவான உண்மைகள் பாபநாசம் அணை, நாடு ...
பாபநாசம் அணை | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவிடம் | பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு |
திறந்தது | 1942 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 143 அடி (44 m) |
உயரம் (அடித்தளம்) | 200 அடி (61 m) |
நீளம் | 744 அடி (227 m) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | பாபநாசம் நீர்தேக்கம் |
மொத்தம் கொள் அளவு | 5.5×10 |
மின் நிலையம் | |
இயக்குனர்(கள்) | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் |
பணியமர்த்தம் | அலகு 1: ஜூலை 8, 1944 அலகு 2: டிசம்பர் 12, 1944 அலகு 3: ஜூன் 10, 1945 அலகு 4: ஜூலை 7, 1951 |
வகை | எடையீர்ப்பு அணை |
சுழலிகள் | 4 x 8 MW பிரான்சிசு-வகை |
நிறுவப்பட்ட திறன் | 32 MW |
மூடு